தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவரை எச்சரித்த ரணில்






ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா  அவர்களை ஆதரித்து  செங்கலடியில் இன்று பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தினை தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.





இக்கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களும், ரவி கருணாநாயக்க, அமீர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.


கூட்டத்திற்கு வந்தவர்கள் 100 பேர் அளவில்தான் இருப்பார்கள். இதனைப் பார்த்து இதுதான் பத்தாயிரம் பேரா என்று  ரணில் விக்கிரமசிங்க கோபப்பட்டு மேடையிலேயே மோகனிடம் கேட்டுள்ளார். 


தான் பத்தாயிரம் பேரை கூட்டத்திற்கு அழைப்பதாக மோகன் ரணில் விக்கிரம சிங்கவிடம் கூறியிருக்கிறார். ஆனால் நிலமை வேறு என்பதனை அறிந்த ரணில் விக்கிரம சிங்க இனிமேல் என்னை மட்டக்களப்புக்கு அழைக்கவேண்டாம் என்று கூறியுள்ளார்.


இதனால் மோகன் அவர்கள் மனமுடைந்துள்ளார்.










Powered by Blogger.