இராணுவச் சீருடையுடன் தாக்குதல் நடத்தும் திட்டத்தில் பயங்கரவாதிகள்! புதிதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை! சர்வதேச ஊடகம்








இராணுவ சீருடை அணிந்து கொண்டு, வான் ஒன்றைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்றும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக நிறுவனம் (Dailymail) தெரிவித்துள்ளது.







இது தொடர்பான பாதுகாப்புத் துறையின் இந்த புதிய எச்சரிக்கைகளை இரண்டு அமைச்சர்களும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.





இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,





ஈஸ்டர் நாளன்று தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள், இராணுவ சீருடைகளுடன் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில், குறைந்தது ஐந்து இலக்குகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்றும் பாதுகாப்புத் தரப்பினரின் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இன்னொரு அலையாக தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்று அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


இராணுவ சீருடை அணிந்து கொண்டு, வான் ஒன்றைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்புத் துறையின் இந்த புதிய எச்சரிக்கைகளை இரண்டு அமைச்சர்களும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இதுபற்றி தமக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


எவ்வாறாயினும், நேற்று ஞாயிற்றுக்கிழமை எந்த தாக்குதலும் நடக்கவில்லை. அதேவேளை, இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேடுதல்களும் நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.