மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ.முரளிதரன் அவர்கள் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக 3 வார காலம் சர்வதேச பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்து் பயணமாகின்றார். இவர் இலங்கையில் இருந்து கலந்து கொள்ளும் மூன்று பிரதிநிதிகளில் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது . அவருடைய பயணம் வெற்றிபெற எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
