மஹிந்தவுக்கு கிடைக்கவுள்ள பதவி! ரணிலின் அடுத்த நிலை என்ன?



ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கம் பதவியேற்கவுள்ளதாகக் தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இத தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


கடந்த சில தினங்களாக நீடித்த இழுபறியின் பின்னர், பிரதமர் பதவியை துறக்க ரணில் விக்கிரமசிங்க நேற்று முடிவு செய்தார் எனவும், நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து தனது முடிவை தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


அதற்கமைய இந்த அரசாங்கம் இன்று மாலை அல்லது நாளை காலை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் ஐக்கிய தேசிய முன்னணியின் இணக்கப்பாட்டுடன் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து, அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஒப்படைப்பது எனவும், மார்ச் வரை தற்போதைய அரசாங்கமே பதவியிலிருக்கும் என்ற மூன்று விடயங்களையும் முன்னிலைப்படுத்தி இரண்டு தரப்பும் ஆலோசித்து வந்தது.




ஆனாலும் தற்போதைய அரசாங்கம் தொடர்வதை புதிதாக பதவியேற்றுக் கொண்ட கோட்டாபய ராஜபக்ஷவும் சஜித் தரப்பும் விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் புதிதாக உருவாகும் அரசாங்கத்தில் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, நிமால் சிறிபாலடி சில்வா உள்ளிட்டவர்கள் அமைச்சு பதவியை ஏற்கவுள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகிறது.


தற்போதைய அரசாங்கம் மக்களின் ஆணையை மதித்து பதவி விலக வேண்டுமென இரு தரப்பும் கருதின. நாடாளுமன்றத்தை கலைப்பதை ஐக்கிய தேசிய முன்னணி, மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லை. அப்படி நாடாளுமன்றத்தை கலைப்பதால் தமது நாடாளுமன்ற ஓய்வூதியம் கிடைக்காமல் போய்விடுமென அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதனால் இறுதி வழியாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதென இரு தரப்பும் இணக்கம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.