சம்மாந்துறையில் பதற்றம்! பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ஆயுதகுழு








சம்மாந்துறையில் பொலிஸாருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.





குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.





பாதிப்பு குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. கடும் மோதல் சம்பவத்தினை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


தற்கொலை குண்டுகள் தயாரிக்கும் நிலையம் ஒன்று உள்ளதாக ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய பொலிஸார் குறித்த பகுதிக்கு இன்று மாலை சென்றுள்ளனர்.







அங்கு சென்று சோதனையிட்ட போது, குழுவொன்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இதேவேளை அந்தப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீடொன்றில் இருந்து வெடி பொருட்கள் தற்கொலை அங்கிகள் மற்றும் ட்ரோன் கெமராக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தாக்குதல்தாரிகள் வெளியிட்ட விடியோவுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ஐ எஸ் அமைப்பின் சீருடைகள் , பதாகைகள் ,ட்றோன் கமரா உட்பட்ட பொருட்களே சம்மாந்துறையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் அறிவிப்பு !





இலங்கையில் பதுங்கியுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளை கைது செய்யும் நோக்கில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.