"சிற் சற்" விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அம்மணி தலைமையிலான குழுவினர் முதலிடத்தைப் பெற்று சம்பியனாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரிச்சங்கம் நடாத்திய மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் உடல் உள மேம்பாட்டை நோக்காக கொண்டு நடாத்திய விளையாட்டு விழா நிகழ்வு இன்றைய தினம் (12) மட்டக்களப்பில் நடைபெற்றபோது குறித்த நிகழ்வில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினரே மேற்குறித்த வெற்றியை தமதாக்கிக்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷனி ஶ்ரீகாந்த் மற்றும் திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி) ஆகிய இருவரது ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த விளையாட்டு நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மாவட்ட செயலக ஓய்வு நிலை பிரதம கணக்காளர் பஸீர், முன்னால் கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்பரன் உள்ளிட்ட மேலும் பல திணைக்கள அதிகாரிகளும் மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரிகளும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இதன் போது பாரம்பரிய மற்றும் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான பல விளையாட்டு நிகழ்வுகள் காலை முதல் மாலை வரை இடம் பெற்று இறுதியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தினால் நடாத்திய அதிஸ்ட இலாப சீட்டிலுப்பில் வெற்றி பெற்றவர்களது பெயர் விபரங்கள் இதன் போது அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.