கல்லடிப் பாலத்தின் கீழ் மிதந்த மர்மப் பொருள்?? வலை வீசும் பொலிசார்!!

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் இன்று (17) திகதி இரவு 6.30 மணியளவில் மர்மப் பொருட்கள் இரண்டு மிதந்து வந்ததை அவதானித்த பொதுமக்கள் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலை நினைவு கூறும் வகையில் மிதக்கும் பொருட்களால் அமைக்கப்பட்ட படகு போற்ற வடிவிலான பொருளே மர்மமான முறையில் மட்டக்களப்பு வாவியில் மிதக்கவிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் வாரம் கடந்த 12 திகதி முதல் 18 ஆம் திகதி வரை சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் அதனை அனுஸ்டிக்கும் வண்ணமாக கொடிகள் குற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தும் வகையிலான வாசகங்கள் பொறிக்கப்பட்டு குறித்த மறுமப் பொருட்கள் மிதக்கவிடப்பட்டுள்ளன.

குறித்த மர்மப் பொருளில் ஒன்று கரையை அடைந்த நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த காத்தான்குடி பொலிசார் அதனை மீட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.