2 ரூபாய்க்காக ஒருவரை கொலை செய்யலாமா? மரத்தால் ஒன்றினைவோம் - ஏர்ன் சிலோன் திட்டத்துடன் ஊடகர்களும் இணைவு!!

லஞ் சீட்டை இல்லாமல் செய்வதற்கான மாற்றீடாக வாழையிலையினை அறிமுகம் செய்வதை திட்டமாக கொண்டு இயங்கி வரும் மனித நேய செயற்பாட்டை முற்று முழுதாக கொண்டியங்கும் ஏர்ன் சிலோன் நிறுவனத்தின் சமூக நேய பணியுடன் மட்டக்களப்பு மாவட்ட ஊடகர்களும் இணைந்து செயற்படவுள்ளதாக நேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம் பெற்ற திட்ட அமுலாக்கம் தொடர்பான சந்திப்பில் கலந்து கொண்ட போது மேற்கண்டவாறு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மட்டக்களப்பில் இருந்து இயங்கி வரும் EARN CEYLON நிறுவனமானது இலாப நோக்கமற்று செயற்படுவதுடன் உணவகங்களில் சூடான உணவு வகைகளை வாழையிலையில் பொதி செய்வதன் ஊடாக கன்சர் நோய்க்கு பிரதான காரணமாக இருக்கும் லஞ்சீட்டினை இல்லாதொழிக்கலாம் எனும் கருப்பொருளினை மையமாக கொண்டு மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து முதற்கட்டமாக 5 உணவகங்களில் இந்த செயற்றிட்டத்தினை (வாழையிலை பாவனை) முன்னெடுத்து வருகின்றது.

குறித்த ஆரம்ப கட்ட திட்டத்தின் பரீட்சார்த்தத்தின் போது ஒரு மாதத்திற்குள் 5 உணவகங்களில் மாத்திரம் 29,064 லஞ்சிற்றிற்கான பாவனையை இல்லாதொழித்து அதற்கான மாற்றீடாக வாழையிலை பயன்பாட்டினை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

குறித்த நிறுவனமாகு  இலங்கை வாழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டை பிரதானமாக கொண்டு சமூக சேவையினை மையமாக கொண்டு இலாப நோக்கமற்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை உண்டுபண்னுவதன் ஊடாக நோயற்ற சமூகத்தை உருவாக்குவதே  இவர்களது திட்டமாக அமைந்துள்ளதுடன்,

எமது உற்பத்திகளை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திப் பொருட்களாக மாற்றிக் கொடுப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மே மாதம் 2025 ல் நாட்டில்  lunch sheet பாவனை முற்றாக தடை செய்யப்பட உள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆதரவு  மற்றும் சமூக உணவாளர்களுடன் இணைந்து மட்டக்களப்பினை  மையமாகக்கொண்டு  சமூக உணர்வு செயற்பாடுகளை ஒருபகுதியாக முன்னெடுத்துவரும் ஏர்ன் சிலோன் - Earn Ceylon நிறுவனம் காலநிலையில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளை முற்றாக  மட்டக்களப்பு  பிரதேசத்திலிருந்து அகற்றுவதற்குண்டான செயற்பாடுகளை முதன் முதலாக மாவட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பாக  ஊடகவியலாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலை நேற்று நடாத்தியிருந்தனர்.

இத்திட்டத்திலுள்ள சாதக பாதகங்கள் சவால்களை மட்டக்களப்பு  பிரதேசத்தை சேர்ந்த சகல உணவக உரிமையாளர்களும்  பங்களிப்பினையும்  ஆதரவினை பெற்றுக்கொள்ள நடவடிக்கையாகவும் நகர் பகுதிகளிலுள்ள கால்நடைகளுக்கு பாதிப்பில்லாத உணவு கிடைக்கும்  பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிடையே வாழை விவசாயத்தினை ஊக்கப்படுத்துவதனூடாக அவர்களுக்கு நிலையான மற்றும் நிரந்தரமான வாழ்வாதாரம் மற்றும் தொழில் செயற்பாடுகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறான சூழல் நட்பு உணவக செயற்பாடுகளின் நிலைத்தன்மையினை உறுதிப்படுத்த மற்றும் மேம்படுத்த உணவக உரிமையாளர்கள் மாநகர சபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆதரவும்  சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகளும் அவசியமானதென என இவ் ஆரோக்கியமான செயற்பாடுகளை செயற்படுத்தும் அத்துடன் இத்திட்டத்தில்  இணைந்து பங்காற்ற முன் வந்த ஊடகவியலாளரகளையும் இதன் போது கௌரவிக்கும் வகையில் ஊடகவியலாளரகளுக்கான ஜெகெட் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஏர்ன் சிலோன்- நிறுவனத்தின  பணிப்பாளர் குணசீலன் சதீஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏர்ன் சிலோன் நிறுவன  ஆலோசகர்  வி.குகதாசன் ஏர்ன் சிலோன்- பணிப்பாளர் சபை  உறுப்பினர் டி.மயூரன் மற்றும் ஏர்ன் சிலோன் - ஊளியர்கள், ஊடகவியலாளரகள் கலந்து கொண்டனர்.















Powered by Blogger.