மாவை சேனாதிராஜா காலமானார் - பாராளுமன்றிலும் வெளியிலும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர்

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா காலாமானார்.

மரணிக்கும் போது அவருக்கு வயது 82 ஆகும்.

யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் உள்ள தனது வீட்டில் தவறுதலாக வீழ்ந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்றைய தினம் புதன்கிழமை (29) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.!

மாவை சேனாதிராஜா 1942 ஒக்டோபர் 27 ஆம் திகதி பிறந்தார்.

தமது அரசியல் வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்த அவர், பாராளுமன்றத்திலும் பாராளுமன்றிற்கு வெளியேயும் அவர்களுக்காக குரல் எழுப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.




Powered by Blogger.