மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம் பகுதியில் ஏ-9 வீதியில் மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு வாகனம் ஒன்றும் இரு லொறிகளும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் முல்லேரியா, வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.