மக்கள் தொகையைவிட அதிக எண்ணிக்கையில் தொலைபேசிகள் பாவனை!!


இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட மூன்று கோடியே பதின்மூன்று இலட்சத்து எண்பத்தி இரண்டாயிரம் (31,382,000) தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் இரண்டு கோடியே இருபத்துதொரு இலட்சத்து எண்பத்தாயிரம்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2022 ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் நூறு (100) பேருக்கு 12 என்ற வீதத்தில் லேண்ட்லைன் தொலைபேசிகள் பாவனையில் உள்ளதாகவும் மொபைல் போன்கள் 100 பேருக்கு 142 போன்கள் என்ற வீதத்தில் பாவனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது .

இணைய வசதிகள் நூறு பேருக்கு 97.7. என்ற அடிப்படையில் உள்ளது . கடந்த ஆண்டு (2022) டிஜிட்டல் தர வாழ்க்கைச் சுட்டெண்ணின் படி, இலங்கை 117 நாடுகளில் 89 வது இடத்தைப் பிடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Powered by Blogger.