பாலமீன்மடு வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இலத்திரனியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!
மட்டக்களப்பு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் பல இலட்சம் பெறுமதியான வைத்தியசாலைக்கு தேவைப்பாடாக இருந்த இலத்திரனியில் உபகரணங்கள் பல வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்களான எஸ்.கிறிஸ்டி (JP), ஐ.கிருஷாந் (JP) , ரீ.கோபாலகிருஷ்ணன் மற்றும் வீ.முத்துலிங்கம் ஆகியோரின் முயற்சியிலும் கொடையாளிகளின் பங்களிப்பிலும் பெறப்பட்ட சுமார் 2 லட்சம் பெறுமதியான இலத்திரனியில் உபகரணங்கள் பாலமீன்மடு வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி இனியன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பின்வரும் கொடையாளிகளான ஆஞ்சநேயர் நிறுவனம், பாலமீன்மடு முதியோர் சங்கம், எஸ்.சந்திரகுமார், எஸ்.விவேகானந்தன் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகியோரின் உதவியுடன் குறித்த இலத்திரனியல் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.