மட்டக்களப்பு காத்தான்குடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
பாலத்தின் கீழ் ஆற்றின் கரை பகுதியில் நான்கு மீனவர்கள் சேர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது மாலை நேரம் ஆகியும் மீன் பிடிப்பதற்கு வெளிச்சம் போதாமையா இருந்த காரணத்தினால் ஆற்றின் கரை பகுதியில் நின்று கொண்டிருந்த இடத்தில் ஆற்றில் இறங்கி வெளிச்ச விளக்கினை கொளுவும் நோக்கத்தில், ஒரு தடியை எடுத்து குத்திக் கொண்டிருக்கும் போது இரவு நேரம் 7:20 மணி அளவில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி இழுத்துச் சென்றுள்ளதாக அங்கு அவருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த நபரை தேடும் பணியில் மீனவர்கள் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சடலத்தை மீட்டெடுத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.