மாகாண கல்விப் பணிப்பாளராக சுஜாதா குலேந்திரகுமார் நியமனம் - இன்று பதவியேற்பு!


கிழக்கு மாகாண பதில் கல்விப் பணிப்பாளராக  மட்டக்களப்பு வலய கல்விப் பணிபாபாளராக பதவி வகித்து வந்த திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இன்று திங்கட்கிழமை (02) திகதி தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் தனது 60 வது வயதில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொன்டமான் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக சேவைக்குள் உள் நுழைந்த இவர், 2017 இல் இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர உத்தியோகத்தராக பதவி உயர்த்தப்பட்டவர்.

இள வயதில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபராகவும் கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் மிக இளவயதில் மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ள நிலையில் தொடர்ச்சியாக பெண்மணிகள் மாகாண கல்வி பணிப்பாளர் பதவியை அலங்கரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.