முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு – மூவர் படுகாயம்


மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சத்துரகொண்டான் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனையைச் சேர்ந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த மேலும் மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலமுனையைச் சேர்ந்த ஒரு வயதும் மூன்று மாதங்களேயான  பாத்திமா மைஸ்ஹறா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

பாலமுனையில் இருந்து ஏறாவூரை நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது சத்துரகொண்டான் கும்பிலாமடு சந்தியை அண்மித்த பகுதியில் வைத்து குறித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Powered by Blogger.