கிங்ஸ்லி இராசநாயகத்தின் கொலை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படுமா?



கிழக்கிலே பல புத்திஜீவிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அக் கொலைகளுக்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கான நீதி கிடைக்கவில்லை.குடும்பங்களுக்கான நீதி கிடைக்கவில்லை.







கோட்டாயஜ ராஜபக்‌ஷவின் ஆட்சியில் விசாரணைகள் நடைபெறுமா?







பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். அவரின் படுகொலையைத் தொடர்ந்து உடனடியாகவே அரியநேந்திரன் அவர்கள் அந்த இடத்திற்கு நியமனமாகின்றார்.





கிங்ஸ்லி இராசநாயகத்தின் கொலைக்கும் அரிய நேத்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக இன்றுவரை பேசப்படுகின்றது.







2004ம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் வெற்றி பெற்றிருந்தார்அவரின் சகபாடியாகிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் திரு இராசநாயகத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கூட்டிச் சென்று அவரின் இராஜினாமா கடிதத்தினை கையளிக்க வைத்தார்இதனை தொடர்ந்து திரு இராசநாயகம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்யாரோ சிலரின் மீது கொண்ட அச்சம் காரணமாக இவ்விடயம் இலகுவாக மறக்கப்பட்டுவிட்டது.





கிங்ஸ்லி இராசநாயகத்தை கௌசல்யனிடம் கூட்டிச் சென்றவர் அரியநேந்திரனாவார். தான் இராஜினமா செய்துவிட்டு தனது மகளுக்கு அழைத்து தான் இராஜினமா செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அரியநேந்திரன் கூட்டிச் சென்றதுமுதல் நடைபெற்ற கருத்து பரிமாற்றங்கள் அனைத்துக்கும் கிங்ஸ்லி இராசநாயகத்தின் மகள் சாட்சி.





மற்றுமொரு சாட்சி கருணா அம்மான். அப்பொழுது யாரால் சுடப்பட்டார் அரியநேந்திரனின் வேண்டுதலின்படி புலிகளால் சுடப்பட்ட விடயம் கருணா அம்மானுக்கு தெரியும். அதைத்தான் கருணா அவர்கள் கிங்ஸ்லி இராசநாயகத்தின் கொலை தொடர்பில் விசாரிக்கவேண்டும் என்று கூறிவருகின்றார்.







1. திரு கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியாகிய தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதியாக தெரிவானவர்.


2. திரு கிங்ஸ்லி இராசநாயகம் அவர்கள் பதவியை துறக்குமாறு ஏன் கேட்கப்பட்டார்யாரால்?





3. அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரால் பதவி விலகும்படி கேட்கப்படாவிட்டால் யாரால் கோரப்பட்டார்?





4. இராசநாயகம் என்பவரின் படுகொலை பற்றி அறிந்தவுடன் .தே.கூட்டமைப்பு கௌரவ சபாநாயகரிடம் ஏன் தெரிவிக்கப்படவில்லைவெற்றான பதவி ஏன் நிரப்பாது தடுக்கப்படவில்லை.





5. யாருடைய வேண்டுதலுக்கமைய .தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு இராசநாயகம் அவர்களை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அவர்களிடம் அழைத்து சென்றார்?





6. இராசநாயகம் படுகொலை செய்யப்பட்ட வேளை இவர்கள் எடுத்த நடவடிக்கைதான் என்ன?





7. எவராகிலும் ஒருவர் இது விடயமாக ஏதும் நடவடிக்கை எடுத்தார்களா?





8. தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான கிங்ஸ்லி இராசநாயகத்தின் கொலையை தமிழரசுக் கட்சி ஏன் இதுவரை நினைவு கூரவில்லை.











இக் கொலை தொடர்பில் பல தடவைக் கொழும்பு 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.





நல்லாட்சி அரசாங்கம் இவ் விசாரணைகளை இடைநிறுத்தியிருந்தது.


புதிய ஜனாதிபதி விசாரணைகளை ஆரம்பித்து சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவாரா? 


Powered by Blogger.