இலங்கை வங்கி ஒன்றினைந்த தொழிற்சங்கத்தின் உணவு விடுமுறை ஆர்ப்பாட்டமொன்று இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
வங்கியினால் வழமையாக வழங்கப்பட்டு வரும் ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பவானது இலங்கை வங்கியின் பணிப்பாளர் சபையினால் வழங்குவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டும் அது இதுவரை வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய தினம் (28) நாடளாவிய ரீதியில் 22 மாவட்டங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு நகர இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் ஒன்றரை மணி நேரம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், வங்கி உத்தியோகத்தர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசமிட்டபடியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.