ரயில் - மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர்  பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஒருவர், ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து, ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



Powered by Blogger.