22 வயதுடைய யுவதியை ஐந்து நாட்களாக காணவில்லை!!


வீட்டை விட்டு வெளியேறி 100 மீற்றர் தூரம் பயணித்து பணியிடத்திற்குச் சென்ற 22 வயதுடைய யுவதி ஒருவர் ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

அவரைக் கண்டுபிடிப்பதற்காக கிராம மக்களும் கம்பளை பொலிஸாரும் இணைந்து நேற்று மகாவலி ஆற்றங்கரை உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த யுவதி கெலிஓயாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிவதாக யுவதியின் சகோதரர் குறிப்பிடுகின்றார்.

வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் சென்ற பின்னர் எல்பிட்டிய தேவாலயத்தின் சீ.சீ.ரி.வி கமெராக்களில் இந்த யுவதியின் உருவம் கடைசியாக பதிவாகியிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலை செய்யும் இடத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய தனது மகள் தன்னிடம் பேருந்து கட்டணமாக நூறு ரூபாவையே கேட்டதாக காணாமல் போன யுவதியின் தாய் கூறுகிறார்.

காணாமல் போன யுவதிக்கு மேலும் மூன்று சகோதரர்கள் உள்ளதாகவும், சம்பவத்தன்று தந்தையும் ஒரு சகோதரனும் கொழும்பு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

வேலைக்குச் செல்வதற்குப் பேருந்து போக்குவரத்தை பயன்படுத்தும், அவர் தனது வீட்டிலிருந்து வெலிகல்லவுக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது, மேலும் வழியில் பல இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக உறவினர்கள் மற்றும் பிற இடங்களில் சோதனை செய்ததாகவும், ஆனால் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் யுவதியின் தந்தை கூறினார்.

பணியிடத்தின் சாவியும் அவரிடம் இருந்ததுடன், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் உரிமையாளர் தனது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதால், அந்த இளம் பெண் மருந்தகத்திற்குச் செல்லவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து உறவினர்கள் கம்பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
Powered by Blogger.